தமிழ் எப்படி வாழப்போகிறது?
தமிழ் ஆதி மொழியாக இருந்தது, அதற்கு ஆதாரங்களும் உள்ளன.
தமிழ் அறிவியல் மொழியாகவும் இருந்தது, அதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
தமிழ் அழகிய மொழியும் கூட,
இருந்தும் தமிழ் ஏன் அனைவரையும் கவரத் தவறியது.
பிறப்பால் தமிழர்கள் அடங்கலாக, பிறந்து தற்போது வாழும் மண்கூட தமிழாக இருப்பவர்கள் வரை.
தமிழின் தொன்மையை ஆராய்கிறோம், அறிகின்றோம், அதற்கான சான்றுகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்கின்றோம்.
ஆனால் நிகழ்காலத்தில் தமிழ் பயன்பாடு அருகி வருவது யாரும் மறுக்க முடியாத உண்மை.
நான் ஒருமுறை பாவலர் அறிவுமதி அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
திடீரென காணநேர்ந்ததால் நீண்ட நேரம் கலந்துரையாட முடியவில்லை.
ஆனால் அவரிடம் ஒன்றே ஒன்றைக் கேட்டேன்.
"ஐயா! போகிற போக்கில் தமிழ் அருகிவிடும் போல் தோண்றுகிறதே! தமிழகம் மற்றும் இலங்கை தவிர்ந்த மற்றைய இடங்களில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக வாழும் தமிழரில் அனேகர் தமிழை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே! தமிழ் வாழ்வதும் இல்லாது போவதும் அவர்களுக்கு ஒன்றாகப் படுகிறதே! தமிழை அதன் அழிவில் இருந்து தடுக்க வழியே இல்லையா?"
அவருக்கும் அதற்கு நீண்ட விளக்கம் கொடுக்க நேரம் இருந்திருக்கவில்லை. சுருக்கமாக "தமிழ் ஒருபோதும் அழிந்து விடாது, ஏனென்றால் தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லாமல் இருப்பதே தமிழ் பற்றி நாம் அச்சமுறக் காரணமாக இருக்கிறது. ஈழம் மலர்ந்து விட்டால்(தமிழுக்கு ஒரு நாடு) தமிழ் வாழும்" என்றார்.
அவர் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் தமிழகத்தையும், ஈழத்தையும் தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் - அது பிஜி, தென்னாபிரிக்கா போன்ற ஆகப்பழைய தமிழர் வாழும் நாடுகளில் இருந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடைக்கால தமிழர் வாழும் நாடுகள் வரை, தமிழின் நிலை சொல்லக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை என்பதே என் கருத்து.
இதில் தமிழுக்காக பாடுபடுபவர்கள் இந்நாடுகளில் ஓரளவு உள்ளபோதும், அவர்களால் அனைத்து தமிழர்களையும் தமிழின் அல்லது தாய் மொழியின் முக்கியத்துவத்தினை உணரவைக்க முடிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
தற்போது அண்மையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் தமிழர்கள் கூடி அனேகமாக முதலாவது தலைமுறையாக உள்ளபடியால் தமிழ் அதிகளவில் பயன்பாட்டு மொழியாக உள்ளபோதிலும், அவர்களது அடுத்த தலைமுறை அந்தந்த நாட்டு மொழிகளையே பயன்பாட்டு மொழியாக கொண்டுள்ளனர். இப்போக்கு இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழை எதிர்பார்க்க முடியாது செய்து விடுமோ? என்ற ஏக்கம் நியாயமானதே.
ஏன் தமிழ்நாட்டில் கூட .......
(அடுத்த பதிவில் தொடருகிறேன்....)
தமிழ் அறிவியல் மொழியாகவும் இருந்தது, அதற்கும் ஆதாரங்கள் உள்ளன.
தமிழ் அழகிய மொழியும் கூட,
இருந்தும் தமிழ் ஏன் அனைவரையும் கவரத் தவறியது.
பிறப்பால் தமிழர்கள் அடங்கலாக, பிறந்து தற்போது வாழும் மண்கூட தமிழாக இருப்பவர்கள் வரை.
தமிழின் தொன்மையை ஆராய்கிறோம், அறிகின்றோம், அதற்கான சான்றுகளை அறிக்கைகளாக சமர்ப்பிக்கின்றோம்.
ஆனால் நிகழ்காலத்தில் தமிழ் பயன்பாடு அருகி வருவது யாரும் மறுக்க முடியாத உண்மை.
நான் ஒருமுறை பாவலர் அறிவுமதி அவர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேர்ந்தது.
திடீரென காணநேர்ந்ததால் நீண்ட நேரம் கலந்துரையாட முடியவில்லை.
ஆனால் அவரிடம் ஒன்றே ஒன்றைக் கேட்டேன்.
"ஐயா! போகிற போக்கில் தமிழ் அருகிவிடும் போல் தோண்றுகிறதே! தமிழகம் மற்றும் இலங்கை தவிர்ந்த மற்றைய இடங்களில் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது தலைமுறையாக வாழும் தமிழரில் அனேகர் தமிழை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே! தமிழ் வாழ்வதும் இல்லாது போவதும் அவர்களுக்கு ஒன்றாகப் படுகிறதே! தமிழை அதன் அழிவில் இருந்து தடுக்க வழியே இல்லையா?"
அவருக்கும் அதற்கு நீண்ட விளக்கம் கொடுக்க நேரம் இருந்திருக்கவில்லை. சுருக்கமாக "தமிழ் ஒருபோதும் அழிந்து விடாது, ஏனென்றால் தமிழருக்கு என்று ஒரு நாடு இல்லாமல் இருப்பதே தமிழ் பற்றி நாம் அச்சமுறக் காரணமாக இருக்கிறது. ஈழம் மலர்ந்து விட்டால்(தமிழுக்கு ஒரு நாடு) தமிழ் வாழும்" என்றார்.
அவர் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை. எனினும் தமிழகத்தையும், ஈழத்தையும் தவிர தமிழர் வாழும் ஏனைய நாடுகளில் - அது பிஜி, தென்னாபிரிக்கா போன்ற ஆகப்பழைய தமிழர் வாழும் நாடுகளில் இருந்து, சிங்கப்பூர், மலேசியா போன்ற இடைக்கால தமிழர் வாழும் நாடுகள் வரை, தமிழின் நிலை சொல்லக்கூடிய அளவுக்கு ஆரோக்கியமாக இல்லை என்பதே என் கருத்து.
இதில் தமிழுக்காக பாடுபடுபவர்கள் இந்நாடுகளில் ஓரளவு உள்ளபோதும், அவர்களால் அனைத்து தமிழர்களையும் தமிழின் அல்லது தாய் மொழியின் முக்கியத்துவத்தினை உணரவைக்க முடிந்திருக்கவில்லை என்பது தான் உண்மை.
தற்போது அண்மையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து பலநாடுகளில் வாழும் தமிழர்கள் கூடி அனேகமாக முதலாவது தலைமுறையாக உள்ளபடியால் தமிழ் அதிகளவில் பயன்பாட்டு மொழியாக உள்ளபோதிலும், அவர்களது அடுத்த தலைமுறை அந்தந்த நாட்டு மொழிகளையே பயன்பாட்டு மொழியாக கொண்டுள்ளனர். இப்போக்கு இனிவரும் அடுத்தடுத்த தலைமுறையினர் மத்தியில் தமிழை எதிர்பார்க்க முடியாது செய்து விடுமோ? என்ற ஏக்கம் நியாயமானதே.
ஏன் தமிழ்நாட்டில் கூட .......
(அடுத்த பதிவில் தொடருகிறேன்....)
2 மறுமொழிகள்:
At 1:00 AM,
விழிப்பு said…
தமிழ் விழி
வலைப்பூ உலகில் உங்கள் வரவு நல்வரவாகுக.
At 1:25 AM,
விழி said…
விழிப்பு அவர்களே!
பார்வையிட்டு பதிவிட்டதற்கு நன்றிகள்.
மேற்படி விடயம் தொடர்பான் தங்ளது மேலன கருதுக்களையும் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment
<< முகப்பு