தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

வியாழன், ஜூலை 06, 2006

என் குழப்பத்திற்கு என்ன பதில்?

தமிழ் தொடர்பாக காதினிலே விழுந்து கொண்டிருக்கிற விடயங்கள் எனக்கு மிகவும் கவலையைத் தருவதாக இருந்ததன் விளைவே இவ் வலைப்பூவின் உதயம்.


*"தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற ஒன்று


*தமிழ் சோறு போடுமா? தமிழைப் படிப்பதால் என்ன இலாபம், அதற்கு செலவு செய்யும் நேரத்தை ஆங்கிலத்தை படிப்பதில் செலவு செய்தால் பயனுண்டு என்று ஓரிரு வருடங்களுக்கு முன் மலேசியாவில் பிறப்பால் தமிழர் ஒருவர் என்னிடம் கேட்டது மனதிற்கு மிகவும் இரணமாக இருந்தது.


*உலகில் அருகி வரும் மொழிகளிலே தமிழும் முன்னணியில் இருப்பதாகவும் ஒரு செய்தி படித்தேன்.


இப்படிப் பலப் பல!


நாளை வரும் சந்ததிக்கு:


"முன்னெரு காலத்திலே தமிழ் என்றொரு மொழி இருந்தது!
அதன் எழுத்து வடிவங்கள் இப்படி இருந்தன!"


என்றெல்லாம் கல்லுரிகளிலே சரித்திரப் பாடத்தில் இடம் பெறும் ஒரு விடயமாக "எம்முயிர்த் தமிழ்" ஆகிவிடக் கூடாது என்ற ஆதாங்கத்தில் இவ் வலைப்பூவினை தொடங்குகின்றேன்.


தமிழின் வளர்ச்சி தொடர்பான ஆக்கபூர்வமான வாதங்களை இவ்வலைப்பூ மூலம் எடுத்துச் செல்வதனூடாக எம்முடைய உயிர் போன்ற மாபெரும் தமிழின் ஆரோக்கியத்தில் நாமும் சிறு பங்கு வகிக்கலாம் என்ற அவாவிலும் உங்கள் அனைவரதும் ஒத்துளைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் ஆரம்பிக்கிறேன்.
(நான் ஒரு தமிழ் மேதாவியோ, அறிஞரோ அல்ல. கோடாணு கோடி தமிழர்களில் நானும் ஒருவன், அவ்வளவே. எனவே எனது கருத்துக்களில், ஆக்கங்களில், எழுத்துக்களில் காணப்படும் தவறுகளை சுட்டிக்காட்ட தவற வேண்டாம்)

3 மறுமொழிகள்:

  • At 10:15 AM, Blogger வசந்த் said…

    சிறந்த பதிவு. தமிழ் மீதான பற்றிற்கு நன்றி.

     

  • At 10:17 AM, Blogger வசந்த் said…

    சிறந்த பதிவு. தமிழ் மீதான பற்றிற்கு நன்றி.

     

  • At 8:55 PM, Blogger விழி said…

    நன்றி வசந்த் அவர்களே, தாமதத்திற்கு வருந்துகிறேன்.
    தொடர்ந்தும் தங்கள் ஆதரவை எதிர்பாரர்க்கிறேன்.

     

Post a Comment

<< முகப்பு